கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 28 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் விளக்கம்


கோவை, நவம்பர் 27 

கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர்  N.J.குமரேஷ் தெரிவித்துள்ளார். 

நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்தாப் (37) என்ற வாலிபர் கத்திகளில் மறைத்து வைத்து 816 கிராம் தங்க துண்டுகளை கடத்தி வந்தார்.  அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக இன்று கோவை சுங்க மற்றும் கலால் வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



அப்போது, சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் மாவட்ட ஆணையர் N.J.குமரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை விமான நிலையத்தில் நேற்று தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தங்கம் கடத்தி வருபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகிறார்கள்.  பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்களா என்பதை கண்காணிக்க அதி நவீன ஸ்கேனர்கள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.8.3 கோடி ஆகும்.

தொடர்ந்து,  விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 

என்று அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...