கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 27

கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, கரும்புகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

105 ஆண்டுகள் பழமையான கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தை இடமாற்றம் செய்வதால், கரும்பு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர்கள், இந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...