WHO KILLED RAGU? என்ற வாக்கியத்தை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் விசாரணை



கோவை, நவம்பர் 28

"WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று அதிகாலை பீளமேடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிமுக-வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயில் தான் காரணம் என்று திமுக-வினரும் பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டிவந்த நிலையில், ஒரு வழிப்பாதையில் பயணித்த லாரியே விபத்துக்குக் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழ்நிலையில், ரகுபதி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகில் "WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சிலர் எழுதிச்சென்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் வருண் (26) மற்றும் பிரசாந்த் (27) என்ற இரு வாலிபர்கள் அந்த வாக்கியத்தினை எழுதியதாகச் சந்தேகித்து நேற்று இரவு இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலையும் பீளமேடு காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சாலையில் வாக்கியம் எழுதியது யார்? எதற்காக எழுதினார்கள்? என்பது தொடர்பாக மட்டுமே விசாரிக்கிறோம்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இருவரும் சின்னியம்பாளையம் பகுதியில் ரகுபதி வீட்டின் அருகே வசிக்கும் பட்டதாரிகள்.

ரகுபதி உயிரிழந்த ஆதங்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...