ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து அச்சமின்றி புகார் அளிக்கலாம்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

கோவை, நவம்பர் 28

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்று விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கோவையில் 50 பேர் விசாரணை ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 39 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும்.

கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகும் பொதுமக்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது.காவல்துறையினர் மிரட்டினால் பயமின்றி விசாரணை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தற்போது கலவரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை நடந்த விசாரணையில் காவல்துறைக்கு சாதகமாகவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு காவல்துறையினர் தீ வைத்தது தொடர்பான வீடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம் பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவது குறைவாகவே உள்ளது. அடுத்த மாதம் மதுரையில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விசாரணைக் காலம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...