உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றன, மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் மெத்தனம்: பாஜக தேசிய செயலாளர் கடும் கண்டனம்

கோவை, நவம்பர் 29

ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை என்று தன் கண்டனத்தை பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கூறியதாவது:



 தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் கழிவறை திட்டம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் உதவிகளை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். கடந்த ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இந்த லஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. சென்னை பாம்பன்சாமி திருக்கோவிலுக்கு பல ஆண்டுகளாகத் தீபம் காட்டவில்லை. இதனால், சென்னையில் வெள்ளம் வந்து நாசமாகப் போகின்றது. சென்னை பாம்பன்சாமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் கோவிலில் பூஜை ஏன் நிறுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை, துப்புக்கெட்ட நியாயமில்லாத துறையாக இருக்கின்றது. அர்ச்சகர்களுக்குச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாத போது செயல் அலுவலர்களுக்கு மட்டும் எதற்குச் சம்பளம் ?. 

மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.  மாணவி ஹதியா விவகாரம் பற்றி கருத்துச் சொல்லவே விரும்பவில்லை. கன்னியாஸ்திரிகளை பற்றி யாரும் பேசாத போது, ஈசா மையத்தைப் பற்றி யாரும் பேச தேவையில்லை. கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார் இதை ஏன் ஊடகங்கள் பேசவில்லை.

கடலூரில் ஆனந்த என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு விட்டுத் தப்பி விட்டதாகத் தகவல் வருகின்றது. ஆனால், காவல்நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...