ரகுபதி மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி


கோவை, நவம்பர் 30

அ.தி.மு.க.வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற உயிரிழந்த சம்பவத்தில் தமிழ அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பின்னர், சின்னியம்பாலயத்தில் உள்ள ரகுபதியின் வீட்டிற்குச் சென்ற அவர், ரகுபதியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 



ரகுபதி என்ற இளைஞர் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர். அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடையிருந்தும் காந்திபுரம் மேம்பாலம் திறக்கப்பட்ட போது ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயரிட்ட பட்ட பலூன் பறக்க விடப்பட்டதை அனைவரும் அறிவோம்.



நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் கட்சி எல்லை மீறி செயல்பட்டு வருகிறது. நான் செயல்தலைவரான போதிலே, பொது மக்களுக்கு இடையூராக இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினேன். அது தி.மு.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது.

ரகுபதி லாரியிலிருந்து தப்பிக்க ஓரம் கட்டியபோது வளைவில் மோதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக அரசு ரகுபதி-யின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் பொங்கலூர் பழனிச்சமியின் சகோதரர் மகளான வித்யா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்த அவர் இன்று கோவை வந்தார். 

ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள வித்யா-வின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், வித்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை நலம் விசாரித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...