கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

கோவை, நவம்பர் 30

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 

கோவை வந்த அவர், ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அண்மையில் காலமான வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி, வித்யாவின் கணவர் டாக்டர். கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார். 



இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ருக்மணி நகர்ப் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், ராம் நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார். 



முன்னதாக, கோவைத் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன் கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...