ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

கோவை, நவம்பர் 30

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைதொடந்து மாநிலக்குழு கூட்டம் பிற்பகல் 12 .30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தொடர்பாக இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மதவெறி பிடித்த பா.ஜ.க,   சோதனைகள் நடத்தி அதிமுகவை தன்னுடய கைப்பாவையாக மாற்றி இருக்கின்றது எனவும், பலவீனமான அதிமுக அரசை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக, பாஜக வேட்பாளார்களை தோற்கடித்து பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும், அதன்படி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப திமுகவை சொந்த மேடையில் இருந்து ஆதரக்கிறோம் எனறவர் இது தேர்தல் கூட்டணி அல்ல என  அவர் தெரிவித்தார். 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பிளேக்ஸ்,பேனர்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்தவர், கோவையில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகம்,கரும்பு ஆராய்ச்சி மையம்,புலிகள் திட்ட முதன்மை வன பாதுகாவலர் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...