கோவையில் அனைத்து கட் அவுட், பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு


கோவை, டிசம்பர் 1

கோவை மாநகரில் உள்ள அனைத்து கட் அவுட்கள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் மரு க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி (32) என்ற இளைஞர் உயிரிழந்தார் என்று புகார்கள் எழுந்தன. 

இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ந.கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் சட்ட விதிமுறைகளை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உடனடியாக நகரத்தில் உள்ள விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார். 

வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பரவலாக கட் அவுட் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அதிமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருந்தால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்திருக்க மாட்டார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பரதாரர்களால் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட் அவுட்களை எவ்வித தயக்கமும் இன்றி அதிகாரிகள் அகற்ற வேண்டும். இதன் மூலமே பிற்காலத்தில் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...