கோவையில் முதல்முறையாக குழந்தையின்மை சிகிச்சைக்கு (IMSI) இம்சி சிகிச்சை முறை அறிமுகம்

கோவை, டிசம்பர் 1

சுதா கருத்தரித்தல் மையம் கோவையில் கடந்த எழு ஆண்டு காலமும், ஈரோட்டில் இருபத்தி எட்டு ஆண்டு காலமும் செயல்பட்டு வருகிறது. குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பிறக்க (IMSI) இம்சி என்கின்ற அதி நவீன சிகிச்சை முறையை கோவையில் முதல் முறையாக இவ்மையம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம்படுத்தியுள்ளது.

இலங்கயை சேர்ந்த நிரோஷா(35) பிரேமதிலகே(45) தம்பதியினர் குழந்தையின்மை சிகிச்சைக்காக இவ்மையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணுகியுள்ளனர். அவர்களுக்கு இம்சி சிகிச்சை முறை மூலம் தற்போது குழந்தை பிறந்துள்ளது.



இதுக்குறித்து இவ்மையத்தின் தலைமை மருத்துவர் தனபாக்கியம் கூறுகையில், ”இந்த அதிநவீன சிகிச்சை முறை கோவையில் முதல்முறையாக அறிமுகம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பல நாடுகளில் மேற்கொள்ளப்படும் அதிநவீன சிகிச்சை முறை கோவையிலும் மேற்கொள்ளப்படும். குழந்தையில்லா தம்பதியினர் இந்த சிகிச்சையின் மூலம் எளிதில் பயனடைய முடியும்.

இம்சி சிகிச்சை முறை மூலம் ஆண் விந்துவை 6500 மடங்கு உருப்பெருக்கி காட்டப்பட்டு விந்துவில் உள்ள குறைகளை நிக்கி வீரியமான மற்றும் தரமான விந்துவை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தை உருவாக்க முடியும்,” என்றார்.

இந்த சிகிச்சை முறைக்கு தற்போது சிகிச்சையிக்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூபாய் 25000 செலவாகும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருவதற்கு காரணம் மக்களின் வாழ்வு முறையும், உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

அதே போல் “ஆண்கள் தங்களது செல்போன்களை மேல் சட்டையில் வைக்க வேண்டும் எனவும் மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்தவும் கூடாது,” எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...