தொடர் கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டும் கோவை அணைகள்

கோவை, டிசம்பர் 02

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சிறுவாணி, பில்லூர், ஆழியார் அணைகள், அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

மாதம்பட்டி, பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவையின் நீர் ஆதரமாக உள்ள சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 55 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 52.32 அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சிறுவாணி பகுதியில் 26 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. 

இதேபோல, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 2,466 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. தற்போது, பெய்து வரும் கனமழையால், 85.90 அடி உயரம் எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து 883 கனஅடியாக உள்ளது. 

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...