அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு


கோவை, நவம்பர் 3

கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர் அமைத்துள்ளனர்.

கோவையில் இன்று நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க தொண்டர்கள் கடந்த இருவார காலமாக சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 



உயிருடன் இருப்பவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறப்பித்தது. ஆனால், அ.தி.மு.க தொண்டர்களால் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய முகப்பு பகுதியில் அக்கட்சியினர் ஒரு பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளனர். அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படம் உட்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பாக, 'ஆளுங்கட்சியினரே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படலாமா?' என்றும், 'நீதிமன்ற உத்தரவை மீறிய ஆளுங்கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்' சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...