ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

டிசம்பர் 04

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கும்போது  , நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து நேராகக் காமராஜர் நினைவு இல்லத்துக்குச் சென்ற விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் சென்று,  அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும், எம்ஜிஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும், அவரது படத்துக்கும், எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, ஜெயலலிதா நினைவிடத்திலும் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகருக்குச் சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68-வது வழங்கப்பட்டது.  சரியாக மாலை 4.20 மணிக்கு வேட்பு மனுவை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...