டிச., 25-ம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்கக் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அனுமதி


டிசம்பர் 08

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, டிசம்பர் 25 ஆம் தேதி சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சிறைபிடித்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கச் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பாகிஸ்தான், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கும் போது இந்திய தூதரக அதிகாரிகளுடன் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...