கோவையில் 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி : தனிப்படை அமைத்து விசாரணை செய்வதாக காவல் ஆணையர் தகவல்

கோவை,டிசம்பர்.11

கோவையில் கடந்த 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.மையங்களிப் கொள்ளை முயற்சி நடந்த சம்பவங்களில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியில் பல்வேறு வங்கிகளுக்குச் சொந்தமான ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் சில ஏ.டி.எம். மையங்களில் பாதுகாவலர் பணியில் உள்ளனர். ஆனால், பல ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு காமிரா மட்டுமே பொருத்தப்பட்டு பாதுகாவலர்கள் இல்லாமல் செயல்பட்டு களில்வருகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையங்களுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர். 

கடந்த 25 நாட்களில் மட்டும் 5 ஏ.டி.எம்  மையங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

நேற்று முன்தினம், ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.3.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹோப் காலேஜ் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளையில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கார் மூலம் வந்த கொள்ளையர்களின் முகம் தெரிந்துள்ளது. காரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அது போலீயான நம்பர் என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...