முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ விசாரணை


டிசம்பர் 12

நிலம் ஒதுக்கியதில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக 28 மாதங்கள் பதவி வகித்தார். அப்போது, ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அவருக்கு முன்பு, துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், நிலம் ஒதுக்க மறுத்து உள்ளார். ஆனால், ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது, நிலம் ஒதுக்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று (டிச., 12) மீண்டும் சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...