சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதலமைச்சர் மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை, டிசம்பர் 14

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, தன்னை சிக்க வைத்ததாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்துத் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் இன்று கோவை 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சாட்சிகள் வராததால், இந்த வழக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கேரள சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியால் தான் இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...