ஆர்.கே.நகரில் டோக்கன் முறையில் குக்கர் விநியோகிப்பதாகப் புகார் : பாத்திரக் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

டிசம்பர் 14 

டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீசார் தனியார் பள்ளிக்கூட பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில் பெட்டி பெட்டியாகக் குக்கர்கள், டிபன்பாக்ஸ் ஆகியவை ஏராளமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அது, கிறிஸ்தவ பள்ளிக்கூட பேருந்து என்பதால் பள்ளி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

அப்போது, கிறிஸ்துமஸ் விழாவுக்காகப் பள்ளி ஆசிரியைகளுக்கு பரிசு கொடுப்பதற்காக குக்கர் வாங்கி வருவதாகவும், அதற்கான இரசீது உள்ளது என்றும் தெரிவித்தனர். எந்தக் கடையில் யார் மூலம் வாங்கி வரப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். அதனைப் போலீசார் சரிபார்த்து உறுதிப்படுத்தினர்.

அரசியல் கட்சியினர் யாரும் புகார் கூறாததால் அந்தப் பேருந்து விடுவிக்கப்பட்டது. காசிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல, ஒரு வேனில் கொண்டு செல்லப்பட்ட 500 குக்கர்கள் பிடிபட்டது. அதுவும், கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பரிசு கொடுக்கக் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்தியதால் போலீசார் அந்த வாகனத்தையும் விடுவித்தனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் குக்கர் ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு இரசீது இருந்தால் மட்டுமே அதை விடுவிக்கின்றனர்.

இந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் இங்குச் சோதனையில் ஈடுபட்டனர்.  உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...