ரத்தனபுரி அருகே லாரி மோதி வாலிபர் பலி - குண்டும் குழியுமான சாலையால் நிகழ்ந்த சோகம்

கோவை, டிசம்பர் 15

கோவையில் குண்டும் குழியுமான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, நிலைதடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ரத்தனபுரி அருகே உள்ள சங்கனூர் - மேட்டுப்பாளையம் சாலையினை மேம்படுத்தாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், சங்கனூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாலிபர் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி ஒட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர் விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலைகளைச் சரிவர பராமரிப்பு செய்யாததால் வாகனப் போக்குவரத்து மிகுந்த புறவழி சாலையான இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், உயிர்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதால் தற்போது போராட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினர். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...