புத்தாண்டு தினத்திற்கு தடை விதிக்கக் கோரி பீர் பாட்டிலுடன் வந்த பாரத் சேனா அமைப்பினர்

கோவை, டிசம்பர் 18

ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவை நகரில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி பாரத்சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் நீர் நிரப்பிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- இன்னும் சில தினங்களில் 2018 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி தினம் இரவு இந்திய கலாச்சாரத்திற்கு எதிராகப் புத்தாண்டு என்ற போர்வையில் நடன நிகழ்ச்சிகள், மது விருந்துகள் உள்ளிட்டவை தனியார் விடுதிகளில் நடைபெறும். மேலும், நள்ளிரவில் வான வேடிக்கை, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.



Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...