காவல்துறையைக் கண்டித்து கைவிலங்குடன் வாயில் கருப்புத்துணி கட்டி வந்து தமிழ் புலிகள் அமைப்பினர் மனு

கோவை, டிசம்பர் 18

பொதுக்கூட்டம் நடத்தத் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் விலங்குடன், வாயில் கருப்புத்துணி கட்டி வந்து தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வடவள்ளி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தக் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால், அந்த மனு மறுக்கப்பட்டது. மேலும், கடந்த நவம்பர் 17ம் தேதியன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளை முன்னிட்டு உக்கடம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோதும் காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதுபோன்றே, ஒவ்வொரு முறையும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கை பேச்சுரிமையை ஒடுக்கும் நடைமுறை ஆகும். 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...