திருச்சி சாலையில் தடுப்பு சுவரின் அகலத்தை குறைக்க முடிவு: காவல் துணை ஆணையர் சுஜித்குமார் தகவல்


கோவை, டிசம்பர் 18

திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் (செண்டர் மீடியன்) அகலத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து துவங்குகிறது திருச்சி சாலை. பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுவருகிறது.



அவினாசி சாலையுடன் ஒப்பிடுகையில், இந்த சாலை சற்றே குறுகலானது. இருவழிப்பாதை கொண்ட இந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டிடங்கள் இருப்பதால் இந்த சாலையில் பார்க்கிங் செய்வது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது.

சாலையில் பார்க்கிங் செய்யப்படும் கார்கள் மீண்டு புறப்படும் போது பின்னால் வரும் வாகனங்கள் அவ்வப்போது மோதி சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.



இந்த சாலையை இரு புறமாக பிரிக்கும் விதமாக சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் அதிக அகலமாக இருப்பதாகவும், தடுப்புச் சுவரின் அகலத்தை குறைத்தால் சாலை சற்றே விரிவாகும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அரசு மருத்துவமனை அருகே தொடங்கி ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை நீள்கிறது. 

இந்த தடுப்புச் சுவரின் அகலம் 3.5 அடியாக உள்ளது. இந்த அகல இடைவெளியில் செயற்கை புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.



தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்கும் போது சாலையில் சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்ற பரிந்துரைகள் வந்தன. 

அதன்படி, தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் 1.5 அடி அகலம் உடையது. இதே போலவே திருச்சி சாலையிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தை கோவை மாநகராட்சியுடன் இணைந்து விரைவில் செயல்படுத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...