விமான நிலைய விரிவாக்கத்திற்காக கழிவுநீர் தொட்டியை இடமாற்றம் செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 18

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு செய்யும்போது மனிதக் கழிவுநீர் தொட்டி பாதிக்கப்படுவதால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பூங்காநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்தால் மனைப்பகுதி பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த குடியிருப்பு வாரியத்தில் பாதாள சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால், மனிதக் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றை வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக பூங்காநகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், பாதாள சாக்கடை முழுவதும் அடைபடும். எனவே, நில எடுப்பு செய்யும் முன் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...