விமான நிலைய விரிவாக்கத்திற்காக கழிவுநீர் தொட்டியை இடமாற்றம் செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 18

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு செய்யும்போது மனிதக் கழிவுநீர் தொட்டி பாதிக்கப்படுவதால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பூங்காநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்தால் மனைப்பகுதி பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த குடியிருப்பு வாரியத்தில் பாதாள சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால், மனிதக் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றை வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக பூங்காநகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், பாதாள சாக்கடை முழுவதும் அடைபடும். எனவே, நில எடுப்பு செய்யும் முன் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...