ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவை, டிசம்பர் 18

ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கோவை மாவட்டக்குழு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப்புறங்களில் 60 சதவிகிதம் மக்களும், நகரத்தில் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர்.



ஆனால், தற்போது மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த உளுந்தம் பருப்பு விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். மேலும், 20 கிலோ அரசியை 10 முதல் 5 கிலோ எனக் குறைத்து வழங்குகின்றனர். கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு ஒரு கிலோ என்ற முறையிலேயே விநியோகிக்கப்படுகிறது. சர்க்கரை விலை 13.50 ரூபாயில் இருந்து 25 ரூபாய் என உயர்த்தியுள்ளனர். மேலும், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதனால், ரேசன் கடையினை நம்பியிருந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அனைத்துப் பொருட்களையும் கடந்த ஆட்சியின் போது விநியோகித்ததைப் போலவே மானிய விலையில் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...