சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்வைப் புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் : அதிகாரிகள் ஏமாற்றம்

கோவை, டிசம்பர் 18

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததால், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. இதில், சிறுபான்மையினர் துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக விழாவிற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி துவங்கி 1.30 மணிநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் விழாவிற்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர். 

இது குறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்காக சுமார் 2 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், பக்கத்து அறையில் இருந்த அவர் வரத் தாமதப்படுத்தியதால் பொறுமையிழந்து வெளியேறியதாகக் கூறினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பிதழை ஏற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...