ரியல் எஸ்டேட் தொழில் செய்து மோசடியில் ஈடுபட்டவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோவை, டிசம்பர் 20

கோவை, காளம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி மோசடியில் ஈடுபட்டவரைப் பிடித்த பொதுமக்கள் கடுமையாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவாணி சாலை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் ஜெகன் என்பவர் சிவன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார். இவர், பல இடங்களில் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இவர் மக்களுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து செவ்வாயன்று (டிச.19) ஜெகனின் அலுவலகத்திற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சிலர் காயமடைந்த ஜெகனை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரவழைத்த நிலையில், பொதுமக்கள் அவரை அலுவலகத்தில் இருந்து வெளியேறவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர உறுதியளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.



இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில், ஜெகன் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...