மாவோயிஸ்ட் சைனி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர், டிசம்பர் 20

திருப்பூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சைனி நீதிமன்றத்தில் ஆஜர் - கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றம் வழக்கை காலதாமதப்படுத்துவதாக புகார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களான ரூபேக்ஷ், அவரது மனைவி சைனி,மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனூப்,கர்நாடகா  மாநிலத்தை சேர்ந்த வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இயக்கத்தின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரூபேக்ஷ் மற்றும் அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் திருப்பூர் எம்.எஸ், நகரில் தங்கி இருந்த போது முறைகேடாக ஆவணங்களை கொடுத்து சிம்கார்ட் வாங்கி பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து முறைகேடாக சிம்கார்ட் பயன்படுத்தியதாக திருப்பூரில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருந்து  சைனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன்   நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைனி தனது வழக்கை நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்தார்.

  சைனி பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...