கோவையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ரயில் கொள்ளையிலும் தொடர்பா? : சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோவை, டிசம்பர் 20

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலுக்கு சேலத்தில் நடைபெற்ற ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 10-ம் தேதி அடுத்தடுத்து அமைந்த 3 ஏ.டி.எம். மையங்களில் புகுந்த வட மாநில கொள்ளையர்கள் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 8 பேரை நாமக்கல் மற்றும் சேலம் மாநகர போலீசார் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்று  சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

5 கோடி கொள்ளை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் இருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

தற்போது ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 8 வட மாநில வாலிபர்களும் இதே போல் கியாஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டே கொள்ளையடித்துள்ளனர். 

இதனால், ரயில் கொள்ளை வழக்கில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி முடிவு செய்தனர். 

அதன்படி, இன்று கோவை வந்த அவர்கள் கைதான வடமாநில கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...