2ஜி வழக்கு: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி ஆஜர்

டிசம்பர் 21

2ஜி வழக்கில் இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் ஆஜராகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக-வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சிபிஐ இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தற்போது தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

இந்நிலையில் நீதிமன்ற வளாகம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...