ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து செய்தியாளரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

சென்னை, டிசம்பர் 21

ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 மணிக்கு மேல் ஜெயலலிதா வீடியோ குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இதனிடையே, ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவைப் பார்வையிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சாதனங்களில் கோளாறு ஏற்படுவது வழக்கம் தான் என்றார்.

மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சவாலாக தேர்தலை நடத்தி வருகிறது. எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ குறித்து முழுமையான விவரங்களை சொல்கிறேன் என்றார் தினகரன்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...