2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை: கொண்டாட்டத்தில் கோவை திமுக வழக்கறிஞர்கள்

கோவை, டிசம்பர் 21

2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து கோவையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருலுகின்றனர்.



நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் ஏ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, வாக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, நீதிமன்ற வளாகத்தில் திரண்ட திமுக வழக்கறிஞர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் நாச்சி முத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...