ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் : 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து பொங்கலூர் பழனிசாமி கருத்து

கோவை, டிசம்பர் 21

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி தனது கருத்து கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு காலதாமதமானது என்றாலும், வரவேற்கத்தக்கது. சில அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் சூழ்ச்சியினால், திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதன் தாக்கம் கடந்த தேர்தல்களில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த போதும், 2 கோடி திமுக தொண்டர்கள் கட்சிக்கு உறுதுணையாகவே இருந்தனர். 

தமிழக மக்களுக்கு பிடித்தமான திராவிட அமைப்பு என்றால் திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கினால் ஏற்பட்ட குழப்பத்தால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவிற்கு வாக்கு அதிகரித்தது. தற்போது, திமுக மீதான அவப்பெயர் நீங்கியிருப்பதால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும். உள்ளாட்சித் தேர்தல் என இனி வரும் அனைத்துத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...