மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


டிசம்பர் 21

மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பு இன்று தில்லியில் சாகித்ய அகாடமியில் நடந்தது. மறைந்த எழுத்தாளர் இன்குலாப்பின், காந்தள்நாட்கள் என்ற கவிதை தொகுதிக்கும் விருது வழங்கப்படுகிறது. கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழிப்பெயர்ப்புக்காக யூமாவாசுகிக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ. சாகுல் அமீது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையிலும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு, தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடக்கக் காலத்தில் திமுக ஆதரவாளராக பொதுப்பணியாற்றியவர், கீழ்வெண்மணி சம்பவத்திற்கு பிறகு மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

இன்குலாப் கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 12 கவிதை தொகுதிகளும், ஒரு சிறுகதை தொகுப்பு, இரண்டு கட்டுரை தொகுப்புகள், 6 நாடக தொகுப்புகளும் ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார். 2017-ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய ‛ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற தொகுதி வெளியானது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2016ல் இவர் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாக இருந்தார். ஆனால், கடைசிநேரத்தில் வண்ணதாசன் பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இன்குலாப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் காலமான ஒருவருக்கு விருது வழங்கலாமா என சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், கண்ணதாசன் போன்றோருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு சாகித்யஅகாடமி வழங்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...