தன்னை பத்திரப்படுத்திய தாய் நீங்கள்: கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்

டிசம்பர் 22

அலைவரிசை பயணத்தில் கரையாமல் இருக்கத் தன்னை பனிக்குடத்தில் வைத்துப் பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், திமுக தலைவர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அலைவரிசை பயணத்தில் நான் கரையாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். நன்றி உணர்ச்சியோடு 2ஜி தீர்ப்பினை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன். அலைவரிசை புயலின் கோரத் தாக்குதல் தனி மனிதர்கள் மட்டுமின்றி இயக்கத்தையும் களங்கப்படுத்தியது. பொய்களோடு போராடுவதும் உண்மையை சில நேரங்களில் தேடுவதும் வெவ்வேறானவை. உண்மையை மறைப்பது விதையை மண்ணில் புதைப்பது போன்றது.

தொழில்நுட்ப புரட்சியை குற்றம் எனக் கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தன. அலைவரிசை ஒதுக்கீட்டால் ரூ.1.76 கோடி நட்டம் என்று கூறிய எச்சில் சிந்தனையாளர்களுக்கு என்ன தண்டனை தருவது?. அலைக்கற்றை தாக்குதல் தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை சில ஆதிக்க சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...