எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி நீலகிரியில் துவக்கம்

நீலகிரி, டிசம்பர் 22

நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதியன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது அரிய புகைப்படக்கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னணு திரைப்பட வாகனத்தினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின் முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, கலைத்துறை, அரசியல், சிறப்புத்திட்டங்கள் தொடங்கி வைத்தல், முக்கியத் தலைவர்களுடனான அரிய புகைப்படங்கள் என 200-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது, இன்று முதல் வருகின்ற 24ம் தேதி வரை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், விழாவினை முன்னிட்டு அருகிலுள்ள மாவட்டங்களான கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனங்களுடன், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், நீலகிரி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



இவ்வாகனங்கள், தொடர்ந்து, வருகின்ற 29-ம் தேதி வரை திரைப்படங்களும், விழா நடைபெறும் நாளான டிசம்பர் 30 அன்று நீலகிரி மாவட்ட குதிரை பந்தய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் நேரலையை மாவட்டத்தின் பலபகுதிகளுக்கும் ஒளிபரப்பப்படவுள்ளது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...