வால்பாறையில் அதிகரித்துள்ள சிறுத்தைகள் நடமாட்டம் : வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை


கோவை, டிசம்பர் 22

கோவை மாவட்டம் வால்பாறை அருகே எஸ்டேட்டிற்குள் புகுந்து, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மானை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாலை நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் அட்டகாசம் தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தைகள், ஆடு, கோழி போன்ற கால்நடைகளைக் கொன்றுவிட்டு செல்கின்றன. கடந்த வாரம் வால்பாறை அடுத்துள்ள அக்காமலை 2வது டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வீட்டின் பின்புறம் சங்கீதா என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, நாய்க் குட்டியை பிடிப்பதற்காகப் பாய்ந்த போது சங்கீதாவின் மீது உரசிச் சென்றதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் நடைபெறுகிறது. 



இந்நிலையில், நேற்று இரவு வரட்டுப்பாறை எஸ்டேட்டில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்றைத் தாக்கி கொன்று, குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது வைத்து சாப்பிட்டது. பாதி இறைச்சியை மட்டும் சாப்பிட்ட சிறுத்தை, மீதியை அங்கேயே விட்டுச் சென்று விட்டது. காலையில் இதைப்பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மீதமுள்ள மானை சாப்பிட மீண்டும் அப்பகுதிக்கு சிறுத்தை வருமா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். 

இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக செல்லுமாறும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...