கோவை நேரு மைதானத்தில் தேசிய கால்பந்து போட்டிகள் தொடக்கம் : அமைச்சருடன் நேரில் கண்டு ரசித்த எம்எல்ஏக்கள்

கோவை, டிசம்பர் 22

கோவை நேரு மைதானத்தில் தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியை, அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன், கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் நேரில் கண்டு ரசித்தனர். 



 சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், தேசிய அளவிலான சிறந்த 10 அணிகள் மோதும் லீக் போட்டி, கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

தற்போது சர்வதேச தரத்தில் உள்ள கால்பந்து மைதானமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவை நேரு மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதனை,  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி,  எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். 

போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள்: கொல்கொத்தா ஈஸ்ட்பெங்கால் கிளப், மோகன்பகான், கோவா சர்ச்சில் பிரதர்ஸ், இம்பால் நெரோகா கால்பந்து கிளப், ஐஸ்வால் கால்பந்து கிளப், பஞ்சாப் மினர்வா கிளப், கேரளா கோகுலம் கிளப், இந்தியன் ஏரோஸ், ஷில்லாங் கால்பந்து கிளப், சென்னை சிட்டி கால்பந்து கிளப்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...