மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்து கோவை இளைஞர்கள் சாதனை

கோவை, டிசம்பர் 23

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.



ஆசியா பாடி பில்டிங் (body building) மற்றும் ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.சி.டி பிசின்ஸ் ஸ்கூல் மாணவர் எம்.விக்னேஷ் என்ற விக் டிசல் (24) மற்றும் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரபாண்டியன் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். 

டிசம்பர் 17, 19-ம் தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில், 60 கிலோ எடை பிரிவில் எம்.விக்னேஷும், 55 கிலோ எடை பிரிவில் ஆர்.சுந்தரபாண்டியனும் இரண்டாம் இடம்பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியன் பாடி பில்டிங் தலைவர் ஹோமயோன் கோரான், பொதுச் செயலாளர் சுரேஷ் கடம், தமிழ்நாடு பாடி பில்டிங் அசோஷியன் பொதுச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.



வெள்ளிப் பதக்கம் வென்ற விக்னேஷ், மிஸ்டர் கே.சி.டி, மிஸ்டர் கோயமுத்தூர், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பதக்கம் வென்ற விக்னேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :- இந்தியாவின் சார்பில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பாகவே கருதுகிறோம். பிற நாட்டு வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டது புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தத் தருணத்தில், எங்களுக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றனர். 

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...