குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை : மத்திய அரசு புதிய சட்டம்

டிசம்பர் 23

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது.

குடிபோதையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. 

அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனைக் கிடைக்கும் வகையிலான புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வழிகாட்டுதல் குழு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிக்கையை மாநிலங்களவையில் நேற்று சமர்பித்தது. இதில், 15 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, குடிபோதையில் வாகனத்தை இயக்கி உயிர் இழப்பு ஏற்படுத்தினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், 3-வது நபருக்கான காப்பீடு தொகையை பெரும்பாலான இரண்டு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பது இல்லை என்றும், இதனால், விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படும் நபர் உரிய இழப்பீடு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. அவற்றையும் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்படுகிறது. இனி வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது 3-வது நபருக்கான வாழ்நாள் காப்பீட்டுத் தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் பல வரையறைகளும் அதில் இடம் பெறுகின்றன.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...