ஆர்.கே. நகரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தினகரன் !

டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை ஆர்.கே. நகரின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புக்கு இடையே ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்.கே. நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் டி.டி.வி. தினகரன் - 5,339, அதிமுக மதுசூதனன் - 2738, திமுக மருது கணேஷ் - 1181, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 258, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 66 என வாக்குகள் பெற்றனர். 

பின் இரண்டாம் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் - 10421, அதிமுக மதுசூதனன் - 4521, திமுக மருது கணேஷ் - 2324, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றனர்.

மூன்றாம் சுற்று முடிவில் தினகரன் - 15,868, அதிமுக மதுசூதனன் - 7,033, திமுக மருது கணேஷ் - 3,750, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றுள்ளனர்.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தற்போது நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...