முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு கள் இறக்கும் இயக்கம் சவால்

கோவை, டிசம்பர் 25

முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்கள், கள் இறக்கும் இயக்கத்துடன் வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.

கோவையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து பெறும் வெற்றி, வெற்றியே அல்ல. கள் இயக்கத்துடன் வாதிட்டு பெறும் வெற்றியே வெற்றி. தினகரனின் வெற்றி, தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தோல்வி. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல் மூன்று இடங்களைக் பிடித்தவர்கள் ஒன்றிணைந்து, கள் இயக்கத்துடன் வாதிட்டு, கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என நிரூபிக்க வேண்டும். இது முடியாமல் போனால் இந்த மூன்று தரப்பும் அரசியலுக்கு முழுக்குப் போடுவதே நாட்டுக்கு நல்லது. 

ஜனவரி 21-ஆம் தேதியன்று சொந்த தேவைக்காக கள் இறக்கிக் கொள்பவர்கள் இறக்கிக் கொள்ளலாம். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். 

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்விலும், இறப்பிலும் எழுந்திருக்கும் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விசாரணை முடிக்கிவிடப்பட வேண்டும். 2ஜி வழக்கில் விடுதலையானவர்கள், சி.ஏ.ஜி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முதலமைச்சராகத் துடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், கள் இயக்கத்தின் சவாலை ஏற்று வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...