சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முபாரக் கைது

கோவை, டிசம்பர்.26: 

சசிக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த   முபாரக் கைது செய்யப்பட்டுள்ளர். 

இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35)   2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும்  ஜி.எம் நகரை சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இதில் அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட  முபாரக் (28) தலைமறைவாக இருந்தார். 

அவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், முபாரக் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 அங்கு சென்ற போலீசார் முபாரக்-ஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...