ரோட்டரி கிளப் முன்னாள் தலைவரின் தபால்தலை வெளியிட முடிவு

ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அவினாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் வர்த்தக ஹாலில் வரும் 20-ம் தேதி ரோட்டரி கிளப் சார்பில் ”நைட்ஸ் இன் காக்கிஸ்”  என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், சிறந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட உள்ளனர். இதைத் தொடர்ந்து, ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை நீதிபதி பாஸ்கரன் வெளியிட உள்ளார். 

டி.டி. ரத்தினசபாபதிபிள்ளை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். விலங்குகள் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் சங்கத்தின் தலைவராகவும், ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத் தலைவராகவும், கோவை பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...