1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவர் கைது

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை, ஜனவரி 18 

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி (54). இவரிடம் மைசூரைச் சேர்ந்த இருவர் தங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர். 

இதை தொடர்ந்து, ரவி அவர்களிடம் நகையை காண்பிக்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து,

 நேற்று காலை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே வந்த அவர்கள் ரவியிடம் 1.5 கிலோ எடையுள்ள நகைகளை காண்பித்தனர். 

அப்போது அவை தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அவர் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும், மைசூர் பகுதியை சேர்ந்த சத்ருஹான் (30), கவுரி (45) என்பதும்,  1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து,  வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...