போலீசாரின் வாகன சோதனையின் போது விபத்து : கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.



திருச்சி சாலை இராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் நேற்று போலிசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதில் போலீசார் சாலையின் நடுவே வந்து ஆட்டோவை மடக்கிப்பிடிக்க முயற்சித்தனர். 

அப்போது ஆட்டோவின் பின்னால் வந்த சூலூரை சேர்ந்த விஜேஸ்குமார் (35) என்ற வாலிபர் நிலை தடுமாறியதோடு ஆட்டோவில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். 

மேலும், போலீசார் அஜாக்கிரதையாக வாகனத் தணிக்கை செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். 

இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...