கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.


கோவை, ஜனவரி 21

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.



கோவையில் முதன்முறையாக வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற இருக்கின்றது. 

ஜல்லிக்கட்டு விழாவிற்கு வாடிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவையை அடுத்த செட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம் கார் பவுண்டேசன் இணைந்து நடத்துகின்றனர். 

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இதற்காக இடம் தயாராகி வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது  தற்போது வரை 750 காளை மாடுகளும் , 550 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து அமைச்சர் கூறுகையில், "தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரையில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 

கடந்தாண்டு அனைத்து மாவட்டத்திலும் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுக்காக குரல் கொடுத்தனர். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு நடந்தது. 

கோவையில் கடந்தாண்டே  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரிக்கை எழுந்தது.

இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கர் அமைப்பும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது" என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...