கோவையில் டி.டி.ரத்தின சபாபதி பிள்ளை தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 21

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் பேசியதாவது:-

நீதித்துறையில், நீதித்துறை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். வழக்குகள் தேக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரத்தின சபாபதி பிள்ளை செய்த சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், தபால் உரை வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை செயல்படுவதற்கு, போலீசாரின் பங்கு முக்கியமாக உள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும், சட்டத்தை செயல்படுத்தவும் கடுமையாக உழைக்கின்றனர். நீதித்துறையானது, போலீசார் செயல்படுத்தும் சட்டங்களை கண்காணிக்கும் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு, நீதிபதி பாஸ்கரன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை தபால் துறை அதிகாரி சம்பத் ஆகியோர் பேசினர். ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு, ரோட்டரி கிளப் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்கள் சின்னகம் மன்னன், பெரியமவாதா, தலைமை காவலர்கள் ஆறுமுகம், சிந்தாமணி, சிந்து, ரவி சங்கர், தங்கராஜ், சுபா ஆகியோருக்கு நீதிபதி பாஸ்கரன் விருது வழங்கினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...