வேலைவாய்ப்பினை உருவாக்க சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 863 பயனாளிகளுக்கு ரூ.1.42-கோடி மதிப்பில் தனி உரிமை நில அனுபவ ஆவணங்கள், வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி, அனைத்துப் பகுதிகளுக்கான குடிநீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைவசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கிலே சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...