ஜெயலலிதா மரணத்தில் யாரும் கருத்து கூறாமல் இருந்தால் நலம் : ஓ. பன்னீர் செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையில் உள்ளதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து சொல்லாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 21

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருவதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு வீட்டிற்குச் செல்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

சரத்பிரபு-வின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தனிக்கட்சி யார் வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும். தினகரன் தனிக்கட்சி துவங்குவதில் அவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவரின் நிலை என்னவென்று அறிய முடிகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாக உள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.9 கோடி இழப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...